தூத்துக்குடியில் 108 கிலோ தங்கம் சிக்கியது: தேர்தல் பறக்கும்படை அதிரடி
தூத்துகுடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும், பாஜக வேட்பாளராக தமிழிசை செளந்திரராஜனும் போட்டியிடுவதால் இந்த் தொகுதி ஸ்டார் தொகுதியாக கருதப்படுகிறது.
மேலும் இருவருமே பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள், பிரபலமானவர்கள் என்பதால் கடைசி நேரத்தில் பணம் தண்ணீராக செலவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
எனவே இந்த தொகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகல் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி நகரில் சோதனையின்போது வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 108 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் சிக்கிய இந்த தங்கத்தை கொண்டு வந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.