தூக்கு போடுவது எப்படி? என மனைவியிடம் நடித்து காட்டிய புதுமாப்பிள்ளை பலி!
மதுரையை சேர்ந்த புதுமாப்பிள்ளை ஒருவர் தனது புது மனைவியிடம் தூக்கு போடுவது எப்படி என விளையாட்டாக நடித்துக் காட்டிய போது விபரீதம் ஏற்பட்டு உண்மையாகவே பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரையைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது. சமீபத்தில் அவர் தனது மனைவியிடம் படுக்கை அறையில் இருந்தபோது தூக்கு போடுவது எப்படி என நடத்திக் காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நின்றிருந்த நாற்காலி நழுவியது
இதை பார்த்ததும் அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார் அவரது சத்தத்தை கேட்டு அவரது வீட்டினர் உடனே வந்து முகமது அலியை கயிற்றில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது
திருமணமான ஒரு சில நாட்களிலேயே தூக்கு போடுவது எப்படி என மனைவிக்கு விளையாட்டாக நாடகம் நடித்துக் காட்ட முயன்ற புதுமாப்பிள்ளை பலியாகி உள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.