துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்தோம்: தேமுதிக

நேற்று அதிமுக கூட்டணியில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் துரைமுருகனிடமும் தேமுதிக பேசியது அம்பலமானதால் தேமுதிகவின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்தது

இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம் என்றும் அரசியல் காரணங்கள் இல்லை என்றும் தேமுதிக நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தனர். மேலும் மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 நாளில் அறிவிப்போம் என்றும், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; தொகுதிப் பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எல்.கே.சுதீஷ் கூறினார்.

ஆனால் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேச தேமுதிக நிர்வாகிகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளதால் தேமுதிக அசிங்கப்பட்டு நிற்பதாக கூறப்படுகிறது

Leave a Reply