துரியோதனனுடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா? அமித்ஷா ஆவேசம்
பிரதமர் மோடியை, துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசிய பிரியங்கா காந்திக்கு, தேர்தல் முடிவுகளே பாடம் புகட்டும் என, பாஜக தலைவர் அமித் ஷா ஆவேசமாக கூறியுள்ளார்.
சமீபத்தில் அரியானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரியங்கா காந்தி, மகாபாரத கதையில் வரும் துரியோதனனுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விமர்சனத்திற்கு இன்று பதிலளித்துள்ள பாஜக தலைவர் அமித் ஷா, மே 23ஆம் தேதி வரப்போகும் மக்களவை தேர்தல் முடிவுகள் பிரியங்கா காந்திக்கு சரியான பாடத்தை புகட்டும் என்றும், 282 தொகுதிகளுக்கு அதிகமாக பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெறும் என்றும் கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.