தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சற்றுமுன் சந்தித்தனர்.
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை சற்றுமுன் நிறைவு பெற்றதாகவும், இதனையடுத்து ஓ.பி.எஸ். உடன் ஆலோசனை நிறைவடைந்த நிலையில் முதலமைச்சரை அவர்கள் சந்திக்க உள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே முதல்வர் வேட்பாளருக்கு போட்டி போடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.