தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபடுவேன்: மு.க.அழகிரி
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் சில வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் உள்ளார்.
இந்த நிலையில் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி இருப்பதால் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் மாறியுள்ள நிலையில், மு.க.அழகிரி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த மு.க.அழகிரி, ‘”திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று கூறியுள்ளார். எனவே மீண்டும் வெகுவிரைவில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.