தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை: 21 வருடங்கள் கழித்து மகளுக்கு அரசு வேலை
பேரிடர் மற்றும் தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவும், அரசுப்பணியும் தருவது அரசின் நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் கடந்த 1997ம் ஆண்டு அல்உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ். இவர் கொலை செய்யப்படும்போது இவருடைய மகள் 10 மாத கைக்குழந்தையாக இருந்தார்
இந்த நிலையில் 22 வருடங்கள் கழித்து காவலர் செல்வராஜ் அவர்களின் மகளுக்கு கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் வேலை வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட தனது தந்தையின் முகத்தை கூட பார்க்காமல் வளர்ந்த இந்த பெண், தந்தையின் மரணத்தால் தற்போது அரசு ஊழியர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.