shadow

தீபாவளியை முன்னிட்டு 42 மீனவர்களை விடுதலை செய்கிறது இலங்கை அரசு?

எல்லை தாண்டி மீன் பிடித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 42 பேர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு 42 மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இவர்கள் இன்று அல்லது நாளை விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்ப வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த செய்தியால் விடுவிக்கப்படவுள்ள 42 மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் தற்போது தீபாவளி புண்ணியத்தில் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply