திரையரங்கு விகிதாச்சார முறையை மாற்ற வேண்டும்: தயாரிப்பாளர்கள்
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த புதிய விகிதாச்சார முறையை மாற்றி அமைக்க வேண்டும் என திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவினை தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வத்திடம் வழங்கி உள்ளனர்.
இந்த மனுவில் தற்போதைய விகிதாச்சார முறையால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே உடனடியாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இந்த விகிதாசார முறையை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.