shadow

திருவாரூர் தேர்தலுக்கு தடை வருமா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு

திருவாரூர் தேர்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விரைவில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் கஜா புயல் பாதிப்பு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆகியவை காரணமாக திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க டி.ராஜா, மாரிமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு விரைவில் விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால் திருவாரூர் தேர்தலுக்கு தடைவருமா? என்ற சந்தேகம் தற்போது பலர் மனதில் எழுந்துள்ளது.

Leave a Reply