shadow

திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், திருவாரூரில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் யார் என்பது ஜனவரி 10ல் அறிவிக்கப்படும் என்றும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் கஜா புயலுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்காததை மறைக்கவே திருவாரூரில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சீமான் குற்றஞ்சாட்டினார்.

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுவது உறுதி என்ற நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியும் களத்தில் குதித்துள்ளது. இன்னும் பாஜக, மக்கள் நீதி மய்யம், பாமக போன்ற கட்சிகள் திருவாரூரில் போட்டியிடுவது குறித்த தங்கள் அறிவிப்பை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply