shadow

திருவாரூர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம்: தினகரன் கோரிக்கை

திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

திருவாரூர் தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலிலி தினகரனின் அமமுக சார்பில் முக்கிய வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

திருவாரூர் தேர்தல் மட்டுமின்றி இனிவரும் தேர்தல்களிலும் குக்கர் சின்னத்தையே தனக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply