shadow

திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் சுற்றுச்சுவர் இடிந்தது: ஒருவர் பலி

நேற்று திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகாரம் ஒன்று இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் ஒருவர் பலியான பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் சற்று முன்னர் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கப்பணியின்போது ரமணாஸ்ரமத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும், மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

படுகாயம் அடைந்த மூன்று பேர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ச்சியாக ஆன்மிக ஸ்தலங்களில் ஏற்பட்டு வரும் விபத்தினால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

Leave a Reply