திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் வெள்ளம்: தஞ்சையில் குடமுழுக்கு ஆரம்பம்

தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில் இன்று குடமுழுக்கு ஆரம்பம் ஆகியுள்ளதால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தஞ்சையின் அனைத்து பகுதிகளிலும் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளமாக உள்ளது.

குடமுழுக்கு விழாவை பார்க்க பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நகரம் முழுவதும் பக்திமயமாக உள்ளது.

தஞ்சை குடமுழுக்கு விழாவை பார்க்க லட்சக்கணக்கானோர் கூடுவர் என்ற காரணத்தால் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காணக்கிடைக்காத இந்த அற்புத காட்சியை பல தொலைக்காட்சிகள், இணையதளங்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply