திருமாவளவனின் நாடகம் இது: தமிழிசை குற்றச்சாட்டு

சிதம்பரம் தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் தற்போது டெல்லியில் உள்ளார். அங்கிருந்தபடியே ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கச்சத்தீவை விரைவில் மீட்போம் என்று கூறினார். திருமாவளவனின் இந்த கருத்துக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘கச்சதீவை இலங்கையிடம் தாரை வார்த்த திமுக- காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்த விசிக தலைவர் திருமாவளவன் கச்சதீவை மீட்போம் என கூறுவது என்ன நாடகம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கச்சத்தீவு, ஈழத்தமிழர்கள் பிரச்சனை எல்லாம் தேர்தல் முடிந்த் பின்புதான் ஞாபக்த்திற்கு வருகிறத? திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டு பதவி ஆசையில் மறந்துவிட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply