பெரும் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை சந்தைக்கு காய்கறி வாங்க வந்த சிறு வியாபாரிகள் திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

காய்கறி வாகனங்களை சந்தைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், போலீசார் அலைக்கழிப்பதாகவும் சிறு வியாபாரிகள் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து போராட்டம் செய்த சிறு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் தஞ்சையில் தற்காலிக காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை காவேரி நகரில் இயங்கிய தற்காலிக காய்கறி சந்தை புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்லது.

வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சந்தை மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்லது.

Leave a Reply