ஏன் தெரியுமா?

மும்பையைச் சேர்ந்த எரிக் மற்றும் மெர்லின் ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் முடிந்ததும் நேராக புதுமண தம்பதிகள் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா
வார்டுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

கொரோனா வார்டுக்கு சென்ற இந்த தம்பதிகள், மருத்துவமனை நிர்வாகிகளை சந்தித்து தங்களுடைய திருமண பரிசாக 50 பெட்கள் கொடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்

இதனால் மகிழ்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகிகள், புதுமண தம்பதிகளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து அவர்கள் நன்கொடையாக கொடுத்த 50 கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகளை பெற்று
கொண்டனர்.

இதற்கு அந்த மருத்துவமனைகள் நிர்வாகிகள் அந்த புதுமண தம்பதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply