திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி!
திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதால் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதாகவும், இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது எனவும், தேவைப்பட்டால் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.