திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அதிரடி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்தில் இந்து அல்லாதோர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என ஆந்திர தலைமைச் செயலர் எல்.வி.சுப்ரமணியம் அறிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மதம் தொடர்பான சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அதே சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆந்திர மாநில தலைமைச் செயலர் சுப்ரமணியம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாதோர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். திருப்பதி தேவஸ்தான தலைமை செயலர் அனில் குமாருடன் நடந்து ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்

தலைமை செயலாளரின் இந்த அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply