திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆதார் இலவச தரிசனம் நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆதார் மூலம் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசனத்திற்காக டிக்கெட் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்க சர்வ தரிசன டிக்கெட் என்ற பெயரில் ஆதார் கார்டு மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கும் திட்டம் கடந்த மே மாதம் முதல் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத‌தால், இதற்காகவே திருப்பதி பேருந்து நிறுத்தம், ரயில்நிலையம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த டிக்கெட் கவுண்டர்கள் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Reply