திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: சென்னையில் பரபரப்பு

தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு, கைகலப்பு வருவது சகஜமாக இருந்து வரும் நிலையில் இன்று காலை தாம்பரம் அருகே தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பைக்கில் வந்த மர்ம நபர்கல் 3 பேர் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக சி.சி.டிவி காட்சிகள் இருப்பதாகவும், இந்த காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பெட்ரோல் வீச்சு சம்பவத்தில் திமுக பிரமுகரின் கார் சேதமடைந்துள்ளது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

திமுக பிரமுகர் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம்பரம் திமுகவினர் போலீசார்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply