திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் என்ற பகுதியை அடுத்த செங்கப்பள்ளியை சேர்ந்த டாக்டர் ஆனந்த் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் இன்று தனது வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டாக்டர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவருக்கு பல கோடி ரூபாய் சொத்து உள்ளது என்பதால் கடன், பணப்பிரச்சினை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply