திமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் திமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சற்றுமுன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை விடுவித்ததற்கான காரணத்தை திமுக தலைமை தெரிவிக்கவில்லை
கருணாநிதி காலத்தில் இருந்து செய்தி தொடர்பாளராக இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன், பல நேரங்களில் திமுக குரலாக ஒலித்தவர். இந்த நிலையில் டி.கே.எஸ். இளங்கோவன் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிப்பு என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சோனியா காந்தி வரவுள்ளதாக இன்று மாலை டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதை அடுத்து அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.