திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு எப்போது? ஸ்டாலின் தகவல்

இன்று இரவு அல்லது நாளை திமுக கூட்டணி தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘வருகிற ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு நடந்தால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது மரபல்ல. இதில் உள் நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது என்றார்.

அப்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் எப்போது அறிவிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சில கட்சிகள் தவிர மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறோம்.

மரபுப்படி அனைத்து கட்சிகளின் தொகுதிகள் முழுமை அடைந்த பிறகு யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அறிவிப்பு இன்று இரேவா அல்லது நாளையோ வெளியிடப்படும். தேர்தல் அறிக்கை இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும் என்றார்.

Leave a Reply