திமுகவின் அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை!
கடந்த 2006ஆம் ஆண்டு வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மதிமுக உடைக்க, தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்வதாக கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங் அவர்களுக்கு வைகோ கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில், வைகோ மீது அவதூறு வழக்கு ஒன்றை திமுக தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் வைகோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.