shadow

திமுகவால் கூட்டணி இல்லாமல் பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது!” -பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக-காங்கிரஸ் உறுதியாகிவிட்ட நிலையில் இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய பாஜக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதுகுறித்து மதுரையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ‘தமிழக அரசியல் கட்சிகள் பாஜகவை வட்டமிட தொடங்கியுள்ளதாகவும், பாஜகவை தவறாக பேச தமிழகத்தில் யாருக்கும் அருகதை இல்லை என்றும் கூறினார்.

மேலும் வரும் காலங்களில் கூட்டணி இல்லாமல் பஞ்சாயத்து தேர்தலில் கூட, திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக தெரிவித்தார்.

 

Leave a Reply