இயக்குனர் வெங்கட்பிரபு சொல்லும் ரகசியம்

இந்த கொரோனா விடுமுறையில் நடிகர்-நடிகைகள் உள்பட திரையுலகினர் பலர் புதுப்புது விஷயங்களை கற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே

அந்த வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு கடந்த இரண்டு மாதங்களாக நடைப்பயிற்சி செய்து வருவதாகவும் தற்போது தன்னுடைய நடைப்பயிற்சியின் தூரம் வாரம் 15 கிலோமீட்டர் என மாறி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதனால் உடலுக்கும் மனதுக்கும் சந்தோஷமாக இருப்பதாகவும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட்பிரபு வாரம்  15 கிலோமீட்டர் நடப்பதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

மேலும் இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் விரைவில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளிக்கும் என்று தான் நம்புவதாகவும் வெங்கட் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply