shadow

தினகரன் தெரிவித்ததை பொருட்படுத்த வேண்டாம்: நக்கீரன் கோபால்

நேற்று காலை நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை 124 பிரிவின்படி கைது செய்தது செல்லாது என்று நீதிமன்றம் கூறியதால் அவர் மாலையே விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைதுக்கு கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்த நிலையில் அம்முக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மட்டும் ஆதரவு தெரிவித்திருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், ‘என்னுடைய கைதுக்கு டிடிவி தினகரன் ஆதரவு தெரிவித்ததை பொருட்படுத்த வேண்டாம் என்றும், நக்கீரன் பத்திரிகையை முடக்க நினைப்பதாகவும், சிறையில் இருக்கும் நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்து என செய்தி வெளியிட்டதால்தான் இந்த கைது நடவடிக்கை என்று கோபால் தெரிவித்தார்.

Leave a Reply