தினகரன் ஆதரவாளர்கள் மீது போலீஸ் புகார்! விதிமுறைகளை மீறியதாக தகவல்
அதிமுக என்ற கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் இழந்த டிடிவி தினகரன் சற்றும் சோர்வடையாமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகிறார்
இந்த நிலையில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்ய வந்தபோது அவருடன் நூற்றுக்கணக்கானோர் கருப்பு, வெள்ளை, சிகப்பு கொடியை ஏந்தி வந்தனர்.
தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது ஐந்து பேர் மட்டுமே உடன் வர வேண்டும் என்பது நடத்தை விதிமுறை. ஆனால் அந்த விதியை மீறி 20க்கும் மேற்பட்டோருடன் வந்து வேட்புமனுதாக்கல் செய்ததாக தண்டையார் பேட்டை காவல்நிலையத்தில் தேர்தல் கண்காணிப்பாளர் புகார் செய்துள்ளார். இதனையடுத்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.