பெரியபாளையத்தில் உயர் மின் அழுத்தம் காரணமாக அந்த பகுதியில் இருந்த வீடுகளின் டிவி, மிக்சி, கிரைண்டர்கள் வெடித்தது

இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள மக்கள் பழுதான பொருட்களை எடுத்து கொண்டு மின்வாரிய அலுவலகம் முன்பு வைத்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெரியபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், இங்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது மட்டுமின்றி தற்போது மின் உபயோக பொருட்களும் வெடித்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.,

Leave a Reply