திடீரென சிம்பு இலங்கை செல்வது ஏன்? பரபரப்பு தகவல்
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க இருந்த ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டை படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது ஆனால் திடீரென ஒரு சில பிரச்சனை காரணமாக இந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை மறுபடியும் நடைபெற்று மீண்டும் இம்மாத இறுதியில் இந்த படத்தை தொடங்குவது என அறிவிக்கப்பட்டது. பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட பல நடிகர்கள் இதில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் மீண்டும் இந்த படம் டிராப்பா? என்ற கேள்வி எழுந்துள்ளது
ஆனால் படக்குழுவினர் இதுகுறித்து கூறியபோது முதலில் இந்த படத்தின் படப்பிடிப்பை பாங்காங்கில் நடத்த திட்டமிட்டதாகவும் ஆனால் தற்போது இலங்கைக்கு மாற்றப்பட்டதாகவும், எனவே இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர். எனவே சிம்பு உள்பட படக்குழுவினர் ஒருசில நாட்களில் இலங்கை செல்லவுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.