shadow

திங்கள் அன்று திறக்கப்படும் ஐயப்பன் கோவில்: 144 தடை உத்தரவு அமல்

கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் ஐயப்பன் பக்தர்கள் உள்பட ஒரு சில அமைப்புகளின் போராட்டம் காரணமாக இன்னும் ஒரு பெண் கூட ஐயப்பன் சன்னிதிக்கு அனுமதிக்கப்படவில்லை

இந்த நிலையில் வரும் திங்களன்று சிறப்பு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் பெண்களும் கோவிலுக்கு வர வாய்ப்பு இருப்பதால் போராட்டக்காரர்களும் குவிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறதூ.

இந்த நிலையில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை பம்பை, நிலக்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply