shadow

திங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா?

1
ஞாயிறு இரவு முதலே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் ”நாளைக்கு திங்கட்கிழமை, என்ற போஸ்ட்கள் தான் நிறைந்து காணப்படும். அவை உங்களை சோர்வடைய செய்யாமல் இந்த வாரத்தை ‘தெறி’யாக துவக்க இந்த 5 விஷயங்களை செய்யலாமா?

1. எதிர்மறையாக யோசிக்காதீர்கள்!

ஞாயிறு இரவிலிருந்தே உங்களை சோர்வாக்கும் சமூக வலைதளப் பதிவு துவங்கி காலையில் நீங்கள் அலாரத்தை இன்னும் 5 நிமிடம் தாமதமாக்குவது வரை அனைத்துமே உங்களை சோர்வாக்கும் விஷயங்கள் தான். எதிர்மறையாக எதையும் யோசிக்காதீர்கள். யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிரித்த முகத்தோடு அன்றைய நாளை துவக்குங்கள்.

2. கோபம் தவிருங்கள்!

அலுவலகத்திற்குள் காலை வந்தவுடன், வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும். அதனால் கூடியவரை கோபம் கொள்ளாமல் கூலாக அணுகுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து அதனை செயல்படுத்துங்கள்.

3. உற்சாகமாக இருங்கள்!

வேலையில் மிகவும் உற்சாகமாக இருங்கள். உங்கள் அருகில் உள்ளவர் உங்களைப் பார்த்து இன்ஃப்ளுயன்ஸ் ஆகுமாறு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சோர்வாக இருந்தால் அது அவரையும் தொற்றிக்கொண்டு அவரும் அப்படியே இருந்து விடுவார். இன்றைய நாளை நீங்கள் அதிக உற்சாகத்துடன் துவக்கும்போது அனைவரும் அதே உத்வேகத்தில் வேலை செய்யத் துவங்கி விடுவார்கள்.

4. புத்தகம் படியுங்கள்!

காலை செய்தித்தாள் துவங்கி உங்களது அலுவலக ஃபைல்கள் வரை கணினி முன்பே அதிக நேரத்தை செலவிடுபவராக இருந்தால், கொஞ்சம் Ctrl + Alt + Del செய்யுங்கள். கண்களுக்கு அழுத்தம் தராமல் ரிலாக்ஸாக ஆஃப் லைனில் வேலைகளை செய்யுங்கள். குறைந்தபட்சம் 5 மணி நேரம் கணினிக்கு விடை கொடுங்கள். மனதுக்கு பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம். இந்த வழக்கம் உங்களது அன்றைய தினத்தை உற்சாகமாக வைத்திருக்கும்.

5. டாப் 3 டாஸ்க்:

3 கிமீ நடைப் பயணம், பார்க்கும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் காலை வணக்கம், 20 நிமிட உடற்பயிற்சி இது மூன்றையும் கட்டாயம் செய்யத் தவறாதீர்கள். அப்புறம் என்ன, உங்கள் திங்கட் கிழமை கெத்து காட்டும் நாளாக அமையும்.

Leave a Reply