shadow

தாவூத் இப்ராஹிம் தம்பிக்கு மும்பையில் மருத்துவ சோதனை

மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மூலகாரணமாக இருந்த, இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் தம்பி இக்பால் கஸ்கர் சமீபத்தில் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் கடந்த சில நாட்களாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் இக்பால் கஸ்கரை தானேவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு வழக்கமான மருத்துவ சோதனை செய்யவிருப்பதாகவும், மருத்துவ சோதனை முடிந்ததும் இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply