தாய் மொழியுடன் சேர்ந்து இந்தி மொழியையும் பயில்வோம்: கேரள ஆளுநர்
ஒரே நாடு, ஒரே மொழி என்ற வகையில் இந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் அமித்ஷாவின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி மூலம் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவோம் என்றும், தாய் மொழியுடன் சேர்ந்து இந்தி மொழியையும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழக அரசியல்வாதிகள் தமிழுடன் சேர்த்து இந்தியை கற்போம் என்று கூறுவார்களா? என்பது கேள்விக்குறியே
Leave a Reply
You must be logged in to post a comment.