shadow

தாடி பாலாஜியின் உண்மை முகத்தை புரிந்து கொண்டேன்: செய்தி வாசிப்பாளர் காயத்ரி கிஷோர்

காமெடி நடிகரான தாடி பாலாஜி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுக்கு பின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் அவரது மனைவியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதிவரை சென்றுவிட்ட தாடி பாலாஜியின் குணத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் பிரிந்திருந்த அவருடைய மனைவி நித்யா மீண்டும் இணைந்தார். இனிமேல் தவறுகள் செய்ய மாட்டேன் என்றும் அனைவர் முன் உறுதியளித்தார்.

இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் காயத்ரி கிஷோர், தாடி பாலாஜி குறித்து கூறுகையில், நான் என்னுடைய சொந்த ஊருக்கு காயத்ரி காரில் குடும்பத்துடன் சென்றேன். அப்போது ஹோட்டலில் சாப்பிட்ட பின், கார் டிரைவர் காரை ஸ்டார்ட் செய்த போது ஸ்டார்ட் ஆகவில்லை. பக்கத்தில் இருந்த கார் டிரைவரிடம் விசாரித்தோம்.

அதில் தாடி பாலாஜி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து தகவல் கொடுத்து விட்டு கிளம்பினார். ஆனால் மீண்டும் தங்களுடைய கார் பக்கத்தில் வந்து நின்றது. அதிலிருந்த தாடி பாலாஜி வேறு ஏதாவது உதவி வேண்டுமா? என கேட்டார். ஒரு சக மனிதராக தேவையான உதவியை செய்தார். இதில் அவரின் உண்மை குணம் தெரியவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பாக இருப்பது போல் நடிக்கிறார் என நினைத்தேன். தற்போது அவரின் குணத்தை புரிந்து கொண்டேன்.’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply