டெல்லி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தவான் சதம் அடித்தும் பிரயோஜனம் இல்லாமல் டெல்லி அணியை பஞ்சாப் நிகழ்த்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின
இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தவான் மட்டுமே 106 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 165 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19.0 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதனால் தவான் சதம் வீணானது
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 8 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.