தலைமை வழக்கறிஞருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு: சர்கார் விவகாரம் குறித்து ஆலோசனையா?
விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளுக்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில் உள்ள காட்சிகளை உடனடியாக நீக்காவிட்டால் சர்கார் படக்குழு மீது மடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அரசு தலைமை வழக்கறிஞருடன் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு சற்றுமுன் நடந்துள்ளது. சர்கார் பட விவகாரம் பற்றி முக்கிய ஆலோசனை என தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்கார் பட காட்சி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி இருந்த நிலையில் இன்று அவர் தலைமை வழக்கறிஞரை சந்தித்திருப்பதால் விஜய் உள்பட சர்கார் படக்குழுவினர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.