என்ன காரணம்?
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் , டிஜிபி உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு டெல்லி திடீரென அழைப்பு விடுத்ததை அடுத்து அவர்கள் டில்லி புறப்பட்டு சென்றனர்.
தமிழக உள்துறை முதன்மை செயலாளா் எஸ்கே பிரபாகா், தமிழக முதல்வரின் செயலாளா் P.செந்தில்குமார், தமிழக போலீஸ் டிஜிபி J.K.திரிபாதி, தமிழக அரசு தலைமை செயலாளா் சண்முகம் மற்றும் தமிழக அரசு உயா் அதிகாரிகள் திடீரென ஒட்டுமொத்தமாக டில்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், இ-பாஸ் முறையும் ரத்து செய்யாமல் இருப்பது மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் நிலவி வருவதை அடுத்து தமிழக அரசு உயர் அதிகாரிகள் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.