19 வயதான ஜோதி துர்கா என்ற மாணவி மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள மதுரை காவல் சார்பு ஆய்வாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு அச்சத்தால் இன்று உயிரிழந்தாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
மாணவச்செல்வங்கள் மனம்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Leave a Reply
You must be logged in to post a comment.