தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் காணாமல் போய்விட்டார்: கே.எஸ்.அழகிரி

தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம்தான் காணாமல் போய்விட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சூலூரில் பேசும்போது, இந்த அழகிரி எங்கிருந்து வந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது என்று கூறியுள்ளதாக அறிந்தேன். அவருக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இதே துணை முதல்வர் ஓபிஎஸ், அவரது ஊரில் கிளைச்செயலாளராக இருந்தபோது, நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தேன். .மேலும், நான் காங்கிரசில் இணைந்து காணாமல் போய் விடவில்லை. ஆனால் தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம்தான் காணாமல் போய்விட்டார் என்றார்.

Leave a Reply