shadow

தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது: அன்புமணி

தருமபுரி – மொரப்பூர் இடையே ரயில்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தி வருகின்றனர். பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணியும் இதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் தருமபுரி – மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை அமைச்சகம் ஒப்புதல் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த செய்தி அந்த பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து அன்புமணி தனது டுவிட்டரில், ‘தருமபுரி – மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்க மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply