shadow

தமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் புரோ கபடி தொடர் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் நிலையில் நேற்று சென்னையில் 2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி போட்டி தொடங்கியது. இந்த போட்டியை நடிகை ஸ்ருதிஹாசன் தொடங்கி வைத்தார்.

நேற்றைய முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியினர் மிக அபாரமாக விளையாடினர். ஆரம்பம் முதலே அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி இறுதியில் 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. இதனால் அந்த அணிக்கு 5 புள்ளிகள் கிடைத்தது. மேலும் தமிழ் தலைவாஸ் அணி இன்று உபி அணியுடன் மோதவுள்ளது.

மேலும் நேற்று நடந்த இன்னொரு போட்டியான புனே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

Leave a Reply