தமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து

தமிழிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் என்று மாநிலங்களவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஆதரவு குவிந்து வருகிறது

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறோம் என்பதை பாஜக நிரூபித்துக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்

இது குறித்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தெரிவிக்கையில் திமுகவின் போராட்டத்திற்கும் மற்ற கட்சிகளின் ஒத்துழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது என்று கூறியுள்ளார்

மேலும் அதிமுகவின் கோகுல இந்திரா இதுகுறித்து கருத்து தெரிவித்த போது அஞ்சல் துறை தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அறிவித்தது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்

Leave a Reply