shadow

தமிழிசை 4000 ஓட்டு வாங்கினால், நான் அரசியலை விட்டு விடுகிறேன்- புகழேந்தி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் பிர்ச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன்னர் டிடிவி ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் ஆட்சியை பிடித்தால் போதும் என்ற அளவில் தத்தளித்து வருகிறது. அவர்களுக்கு தமிழகத்தில் வேலையே இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழிசை பாஜக வேட்பாளருக்கு ஒரு 3000 அல்லது 4000 ஓட்டு வாங்கி கொடுத்துவிட்டால் நான் அரசியலைவிட்டே விலகிவிடுகிறேன்.

1000 ஓட்டு கூட வாங்க முடியாதவர்கள் எல்லாம் எங்களை விமர்சிக்க தகுதியே இல்லாதவர்கள். தமிழிசை அவர்கள் மேக்கப் போட்டு கொண்டு ஒரு ஜாலிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது பிரச்சாரம் இங்கு எடுபடாது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply