தமிழர்கள் நன்றி மறந்தவர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்
இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்பி, ஒரே நாடு ஒரே மொழி என்ற நிலையை கொண்டு வர வேண்டும் என மத்திய பாஜக அரசு முயற்சித்து வரும் நிலையில் திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மனிதர்களுக்கு ஆறு அறிவு உள்ளது என்பதால் ஆறு மொழியை பயின்று கொள்ள வேண்டும் என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்ற ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் தமிழின் தொன்மையை புகழ்ந்து பாராட்டிய பிரதமர் மோடியை தமிழர்கள் பாராட்டியிருக்க வேண்டாமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
பொன்னாரின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சரியான பதிலடி தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.