தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் சிக்கிம் மாநிலத்தில் நடந்த விபத்து ஒன்றில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் அவருக்கு தனது இரங்கலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது

திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த ராணுவவீரர் திரு.தேவ் ஆனந்த் அவர்கள் சிக்கிம் மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

திரு‌.தேவ் ஆனந்த் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்