shadow

தமிழக முதல்வர் பதவிக்காக மீண்டும் மாலை மாற்றி திருமணம்: தீபா முடிவு

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சமீபத்தில் தனது கணவர் மாதவனை பிரிந்து பின்னர் மீண்டும் இணைந்துள்ளார். இந்த நிலையில் ஜோதிடர் ஒருவர் அறிவுரையின்படி ஜெயலலிதா சமாதி முன்னர் மீண்டும் கணவர் மாதவனுக்கு மாலை மாற்றி திருமண சடங்குபோல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு செய்தால் ஜெயலலிதாவின் ஆன்மா ஆசிர்வாதத்தில் தீபா தமிழக முதல்வராகும் அதிர்ஷ்டம் இருப்பதாக பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளர். எனவே எந்த நேரத்திலும் இந்த மாலை மாற்றும் திருமண சடங்கு நடக்க வாய்ப்பு இருப்பதாக தீபா பேரவை தரப்பு கூறுகின்றது

இது குறித்து மாதவனிடம் கேட்டபோது, ‛‛முதல்வராகும் அனைத்து தகுதிகளும் தீபாவுக்கு இருக்கின்றன. நானும் அவரும் 2வது திருமணம் செய்து கொண்டோமா இல்லையா என்பது எங்கள் சொந்த விஷயம். இதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார். ஆனால், திருமணம் செய்து கொண்டதை அவர் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.

Leave a Reply