தமிழக முதல்வரின் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டு தெரிவித்த துணை ஜனாதிபதி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விவசாயத்தை மறக்காமல் உள்ளார் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருகிறார் என்றும் முதல்வர் பழனிசாமி தங்கள் ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது என்று வெங்கையாநாயுடு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்

மேலும் நெல் பயிருடன் முதல்வர் பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் துணை ஜனாதிபதி பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை ஜனாதிபதி பதிவு செய்துள்ள இந்த டுவிட் காரணமாக முதல்வருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply