shadow

தமிழக பேருந்துகள் மீது கல்வீச்சு: புதுச்சேரியில் பரபரப்பு

நாடு முழுவதும் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இன்று ஓடவில்லை.

இருப்பினும் தமிழகத்தில் இந்த வேலைநிறுத்தத்தால் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீச்சு நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறை சென்ற தமிழக அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், இந்த கல்வீச்சில் பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply